Thursday, September 30, 2004

கவிதை: குழப்பம்

அப்துல் ரகுமான்தனமாய் ஒரு கவிதை. **********************எனக்கு குழப்பமாய் இருக்கிறது********************** பித்தன் தனியே அமர்ந்து வானைப் பார்த்துக் கொண்டிருந்தான். "என்ன செய்கிறாய்?", என்று கேட்டேன். "குழம்பிக் கொண்டிருக்கிறேன்", என்றான். அவன் மேலும் சொன்னான். "நான் ஏற்கெனவே குழம்பி இருந்தேனா? அல்லது இப்பொழுதுதான் குழம்புகிறேனா? நான் குழம்பித்தான் இருக்கிறேனா? அல்லது தெளிவாய்த்தான் இருக்கிறேனா? இதுவே குழப்பமாய் இருக்கிறது? அப்படியென்றால் நான் குழம்பியிருக்கிறேன். இந்த குழப்பம் தெளிவு வந்ததனாலா? அல்லது தெளிவுதான் இப்பொழுது குழப்பம் ஆகிவிட்டதா? மொத்தத்தில் நான் குழம்பியிருக்கிறேன் என்று எனக்குத் தெளிவாய்த் தெரிகிறது. அப்படியென்றால் நான் தெளிவாய் இருக்கிறேன். அதெப்படி? தெளிவும் குழப்பமும் சேர்ந்து வருமா? அதாவது தெளிவுதான் குழப்பமா? இல்லை குழப்பம்தான் தெளிவா? தெளிவென்றால் என்ன? குழப்பமென்றால் என்ன? இப்பொழுது தெளிவாகி விட்டது. தெளிவாக இருப்பதுதான் குழம்பும் குழம்புவதுதான் தெளியும். குழப்ப வைப்பது தெளிவு தெளிய வைப்பது குழப்பம். இப்படி இன்னும் எத்தனை குழப்பங்கள் என்னைக் குழப்பக் காத்திருக்கின்றனவோ? எனக்கு இன்னும் குழப்பமாகவே இருக்கிறது. இருந்தாலும் குழப்பமில்லாமல் தத்துவங்களும், விஞ்ஞானமும் இல்லை. ஆப்பிள் ஏன் கீழே விழுந்ததென்று குழம்பாவிடில் புவிஈர்ப்பின் அவசியம் தெரிந்திருக்காது. பறவைகள் மட்டுமேன் பறக்கின்றனவென்று குழம்பாவிடில் விமானத்தின் கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்காது. ஆனால் இன்று நீங்கள் குழம்புவதை நிறுத்தி விட்டீர்கள். தெளிவு என்னும் அறியாமையில் மூழ்கி விட்டீர்கள். எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டீர்கள்.அல்லது கண்மூடித்தன்மாய் எதிர்க்கத் தொடங்கி விட்டீர்கள். அதனால் குட்டையைப்போல் ஒரே இடத்தில் தேங்க ஆரம்பித்து விட்டீர்கள். ஆதலால் எல்லோரும் குழம்பிக் கொண்டே இருங்கள். நதி போல் என்றும் பயணித்துக் கொண்டே இருங்கள்." நன்றி : "மரத்தடி"  ஆனந்த் பழனிசாமி. பா.நந்தன்

Wednesday, September 29, 2004

கவிதை: விடுதலை..

"நேற்று என் தந்தை தோண்டினார்

நீரும், எண்ணெயும் தந்தது இப்பூமி

இன்று நான் தோண்டுகிறேன்

அங்கங்கே வெடிகுண்டுகளும் கிடைக்கின்றன

நாளை என் மகன் தோண்டினால்

எங்கும் எலும்புக்கூடுகள்தான் இருக்குமோ?"



நன்றி:- திரு.த.ஸ்டாலின் குணசேகரன்

Wednesday, September 22, 2004

கவிதை: இருக்கிறேனம்மா இருக்கிறேன்..

என்னைப் பிரிந்துவிட்ட என்னருமைச் சொந்தமொன்றுக்காக இக்கவிதையை இங்கே அர்பணிக்கிறேன்....



பாலமிட்ட உறவுநிலா பாலைநதி அலையாக

காலவெளிச் சோலைகளில் கலக்கமலர் பூத்ததென்ன!



எண்ணச் சிறகுகளை எவர்வெட்டிப் போட்டாலும்

கண்ணில் பழையநிலா கவிபேசத் தவறவில்லை.



சாகாத நினைவே தங்கமே! இந்நாளில்

நோகாமல் என்னெஞ்சை நூல்போட்டுச் சுமக்கிறது



இன்னும் மனக்குளத்தில் ஏக்கப் படகுவர

என்னை நினைப்பாயோ? எண்ணாமல் இருப்பாயோ?



அந்தப் பனிநாட்கள் ஐயோ ! என் கற்பகமே!

எந்தப் பிறவியிலே எப்போது இனிவருமோ?



தொட்டுப் படிக்காத தொடர்கதையே! ஏனம்மா

விட்டு விலகி வெகுதூரம் போய்விட்டாய்?



போனகதை போனதென்றா பூமியிலே நானிருப்பேன்?

ஏனம்மா தெரியாதா? இருக்கிறதே ஓரிதயம்!



உன்னினைவுச் சுமையென்றன் ஒளிநெஞ்சில் இல்லையென்றால்

என்னிதயம் என்னிதயம் எப்போதோ கனத்திருக்கும்.



இதயவிழி தனைமெல்ல எண்ண இமை மூடட்டும்!

வதங்கிவிட்ட மலர் போல்என் வாழ்நாளும் முடியட்டும்!



அங்கும் என் அழகே! உன் அன்புரசப் பிஞ்சுமுகம்

மங்காமல் மின்னியென்றன் மடிமீது மலரட்டும்!



- நன்றி : வைரமுத்துவின் "வைகறை மேகங்கள்"

Sunday, September 19, 2004

நல்லதோர் வீணை செய்தே...

என் பாடல் பெட்டகத்திலிருந்து அண்மையில் கேட்க நேரிட்ட இப் பாரதியார் பாடல், என்னை மிகவும் பாதித்த பாடல்களில் ஒன்று.





நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?

சொல்லடி சிவசக்தி! - எனைச்

சுடர்மிகு மறிவுடன் படைத்து விட்டாய்,

வல்லமை தாராயோ, - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி, சிவசக்தி! - நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?



விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன், - நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும் - சிவ

சக்தியைப் பாடுநல் லகங்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன்; இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?





Friday, September 10, 2004

கவிதை: நான்

இன்று

என்

பிரவாகம் கண்டு கரைகள்

பிரமிக்கலாம்.

ஆனால்

இந்த நதி

பாலைவனப் பாறைகளின்

இடுக்கில் கசிந்துதான்

இறங்கி வந்தது !





- பொய்யெனப் பெய்யும் மழை (வைரமுத்து)

Thursday, September 02, 2004

நம்பிக்கையே நல்லது..எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது..

எத்தனை சத்தான வரிகள். சிகரம் படத்தில் நடிகர் சார்ளி படுவதாக அமையும் இப்பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள். இதுவும் என் அபிமான கவிஞர் வைரமுத்துவின் வரிகள்தான். இந்தப்பாடலின் இறுதி வரிகளில் உலகில் எதை நீ இழந்தலும் இயற்கை உன்னை வெறுப்பதிலை. அது வேறுபாடு காட்டுவதில்லை என்ற வரிகள் நிச்சயம் நிரந்தரமானவை.



சந்தர்ப்பம்: அவன் காத்திருந்தான். என்றேனும் ஒரு நாள் பாடகனாகிவிட முடியும் என்ற நகர்த்த முடியாத நம்பிக்கையிலிருந்த்தான். வந்தது வாய்ப்பு.ஆனந்தக் கண்ணீர் ஒலிபெருக்கியில் தெறிக்க உருகிப்பாடுகிறான். காத்திரு மூங்கிலே காத்திரு! என்றேனும் ஒருநாள் உன்னை வண்டு துளைக்கும். நீ புல்லாங்குழலாவாய். பொறுத்திரு.







அகரம் இப்போ சிகரம் ஆச்சு

தகரம் இப்போ தங்கம் ஆச்சு

காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்

புல்லாங்குழலாச்சு



சங்கீதமே சந்நிதி

சந்தோஷம் சொல்லும் சங்கதி



**

கார்காலம் வந்தாலென்ன

கடுங்கோடை வந்தாலென்ன

மழைவெள்ளம் போகும்; கரை ரெண்டும் வாழும்



காலங்கள் போனாலென்ன

கோலங்கள் போனாலென்ன

பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்



அன்புக்கு உருவம் இல்லை

பாசத்தில் பருவம் இல்லை

வானோடு முடிவும் இல்லை

வாழ்வோடு விடையும் இல்லை




இன்றென்பது உண்மயே

நம்பிக்கை ஒன்றே நன்மையே



**

தண்ணீரில் மீன்கள் வாழும்

கண்ணீரில் காதல் வாழும்

ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே



பசியாறப் பார்வை போதும்

பரிமாற வார்த்தை போதும்

கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்



தலைசாய்க்க இடமா இல்லை

தலைகோத விரலா இல்லை

இளங்காற்று வரவா இல்லை

இளைப்பாறு பரவாயில்லை



நம்பிக்கையே நல்லது

எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது













Wednesday, September 01, 2004

கவிதை : (இரட்டை நாக்கு) உலகம்

(இரட்டை நாக்கு) உலகம்



உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்

தன்னம்பிக்கை தளரவிடாதே

இரட்டைப்பேச்சு பேசும் உலகம்

மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே



ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு

உலகின் வாயில் இரட்டை நாக்கு

எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லம்

உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது



இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்

இலக்கியம் இல்லை லேகியம் என்றது

திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்

பரிமே லழகரை வரச்சொல் என்றது



குறுந்தொகை கம்பன் கொட்டி முழங்கினேன்

குண்டுச்சட்டியில் குதிரை என்றது

எலியட் நெருடா எல்லம் சொன்னேன்

திறமை எல்லாம் திருடிய தென்றது



எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்

வடுக பட்டி வ்ழியுது என்றது

அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன்

கழுதைக் கெதற்குக் கண்மை என்றது



மேடையில் கால்மேல் காலிட் டமர்ந்தேன்

படித்த திமிர் பணிவில்லை என்றது

மூத்தவர் வந்தந்தும் முதலில் எழுந்தேன்

கவிஞன் நல்ல 'காக்கா' என்றது



உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்

காதில் பூ வைக்கிறான் கவனம் என்றது

விரல்நகத் தளவு வீமர்சனம் செய்தேன்

அரிவாள் எடுக்கிறான் ஆபத்து என்றது



மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் வீழ்ந்தேன்

புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது

மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன்

தந்திரக் காரன் தள்ளிநில் என்றது



பகையை கண்டு பைய நகர்ந்தேன்

பயந்துவிட்டான் பாவம் என்றது

மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்

விளங்கிவிட்டதா மிருகம் என்றது



பணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன்

வறுமையின் விந்தில் பிறந்தவன் என்றது

என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன்

புலவன் இல்லை பூர்ஷ்வா என்றது



கயவர் கேட்டால் காசு மறுத்தேன்

கறக்க முடியா கஞ்சன் என்றது

உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்

உதறித் திரியும் ஊதாரி என்றது



மங்கைய ரிடையே மெளனம் காத்தேன்

கவிஞன் என்ற கர்வம் என்றது

பெண்கள் சிலருடன் பேசத் தொடங்கினேன்

கண்களைக் கவனி காமம் என்றது



விருதுகள் கழுத்தில் வீழக்கண்டேன்

குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது

மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன்

டெல்லியில் யாரையோ தெரியும் என்றது



திசைகள் தோறும் தேதி கொடுத்தேன்

ஐயோ புகழுக் கலைகிறான் என்றது

நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன்

கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது



அப்படி இருந்தால் அதுவும் தப்பு

இப்படி இருந்தால் இதுவும் தப்பு

கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்

தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும்



உலகின் வாயைத் தைத்திடு; அல்லது

இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு

உலகின் வாயைத் தைப்பது கடினம்

உனது செவிகள் மூடுதல் சுலபம்



- நன்றி: வைரமுத்து (தமிழுக்கு நிறம் உண்டு)













What is love? What is Marriage?

Found this interesting story on another blog. I am not gonna defend or offend this thought but it's "Just another interesting thought" ....

One day, Plato asked his teacher, "What is love? How can I find it?" His teacher answered, "There is a vast wheat field in front. Walk forward without turning back, and pick only one stalk. If you find the most magnificent stalk, then you have found love."
Plato walked forward, and before long, he returned with empty hands, having picked nothing. His teacher asked, "Why did you not pick any stalk?" Plato answered, "Because I could only pick once, and yet I could not turn back. I did find the most magnificent stalk, but did not know if there were any better ones ahead, so I did not pick it. As I walked further, the stalks that I saw were not as good as the earlier one, so I did not pick any in the end. His teacher then said, "And that is love."

On another day, Plato asked his teacher, "What is marriage? How can I Find it?" His teacher answered, "There is a thriving forest in front. Walk forward without turning back, and chop down only one tree. If you find the tallest tree, then you have found marriage". Plato walked forward, and before long, he returned with a tree. The tree was not thriving, and it was not tall either. It was only an ordinary tree. His teacher asked, "Why did you chop down such an ordinary tree?" Plato answered, "Because of my previous experience. I had walked through the field, but returned with empty hands. This time, I saw this tree, and I felt that it was not bad, so I chopped it down and brought it back. I did not want to miss the opportunity." His teacher then said, "And that is marriage. You see son Love is the most beautiful thing to happen to a person, its an opportunity but you don't realise its worth when you have it but only when its gone like the field of stalks. Marriage like the tree you chopped , it's a compromise."