Friday, September 27, 2013

அம்மா


அம்மா

பாக்கிரீடப் பாரதியல்ல - நான்
பொங்குதமிழ்த் தாசனுமல்ல;
கோக்குறிஞ்சி இளங்கோவல்ல - நான்
கம்பனெனும் தேனும் அல்ல;
தீக்கருகு கீரனுமல்ல - நான்
தெள்ளு தமிழ் வள்ளுவனல்ல;
சேக்கிழார்ச் செம்மலுமல்ல - நான்
சீத்தலைச் சாத்தனுமல்ல;
காக்கையொன்றின் பொன்குஞ்சு - அதில்
உவகையுறும் என்னெஞ்சு!
ஆக்கியென்னை அளித்தவளும்
அள்ளியணைத்துக் காத்தவளும்
தூக்கியென்னை வளர்த்தவளும்
துணிவு நேர்மை தந்தவளும்
வாக்கியத்தை விதைத்தவளும் - அதை
விருட்சமாக வளர்த்தவளும்
பாக்கியமே நான் செய்தேன்
பெற்றிடவே இத்தாயை!


by

No comments: